புதன், நவம்பர் 19 2025
Last Updated : 16 Dec, 2020 03:15 AM
Published : 16 Dec 2020 03:15 AM Last Updated : 16 Dec 2020 03:15 AM
மதுரை: மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த சங்கலி முருகன், காமராஜ் ஆகிய இருவரது குடும்பத்தினரும் கூடக்கோவில் பகுதியிலுள்ள குல தெய்வக் கோயிலுக்குச் சென்றனர். அங்கு சுவாமி கும்பிட்டுவிட்டு அதே பகுதியில் இரு குடும்பத்தினரும் தங்கி இருந்தனர். அப்போது சங்கலி முருகன் மகள் யாழினி (10), காமராஜ் மகன் குணசேகரன் (10) ஆகிய இருவரையும் காணவில்லை. அருகிலிருந்த கண்மாயில் இருவரும் சேற்றில் சிக்கி உயிரிழந்து கிடந்தனர். கண்மாய் நீரில் இறங்கி விளையாடியபோது, சேற்றில் சிக்கி உயிரிழந்து இருக்கலாம் எனத் தெரிகிறது. கூடக்கோவில் போலீஸார் விசாரிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT