Published : 14 Dec 2020 03:15 AM
Last Updated : 14 Dec 2020 03:15 AM

சிறுமிக்கு துன்புறுத்தல்: இளைஞர் கைது

திருப்பூர் எம்.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சபரிநாதன் (24). இவர், ஸ்டூடியோ ஒன்றில் புகைப்பட கலைஞராக வேலை செய்து வந்தார். இவர், 17 வயதுசிறுமியை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், ஆசை வார்த்தை கூறி சில தினங்களுக்கு முன் சிறுமிக்கு சபரிநாதன் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். இதுதொடர்பாக சிறுமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மாநகர வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், போக்ஸோ சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் இரவு சபரிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x