Published : 14 Dec 2020 03:15 AM
Last Updated : 14 Dec 2020 03:15 AM

அலங்காநல்லூரில் ஆதித்தமிழர் பேரவை ஆலோசனை கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலாளர் முத்துகிருஷ்ணன், துணை பொதுச்செயலாளர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது. புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநில கொள்கை பரப்பு செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றியச் செயலாளர் ஆதிரையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x