Published : 14 Dec 2020 03:16 AM
Last Updated : 14 Dec 2020 03:16 AM

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாமில் 52,250 பேர் விண்ணப்பம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட புதிய வாக்காளர்கள் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. 2 நாட்களில் நடைபெற்ற இறுதி சிறப்பு முகாமில் 3 மாவட்டங்களில் 52 ஆயிரத்து 250 பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த நவம்பர் மாதம் 16-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டில்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 12 லட்சத்து 34 ஆயிரத்து 864 வாக்காளர்கள் உள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 10 லட்சத்து 3 ஆயிரத்து 769 பேர் உள்ளனர். அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 9 லட்சத்து 38 ஆயிரத்து 692 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக நவம்பர் மாதம் 21 மற்றும் 22-ம் தேதிகளில் சிறப்பு முகாம் முதற் கட்டமாக நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்பேரில் டிசம்பர் மாதம் 12 மற்றும் 13-ம் தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் 2-ம் கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் டிசம்பர் 12-ம் தேதி வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாம் 2-ம் கட்டமாக நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், முதல் நாளில் 3 மாவட்டங்களில் 20 ஆயி ரத்து 85 பேர் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து, 2-ம் நாளாக வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் 3 மாவட்டங்களில் உள்ள 1,702 வாக்குச்சாவடி மையங்களில் நேற்று நடைபெற்றது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், அனைத்து வாக்குச்சாவடி மையங் களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

2-ம் நாள் சிறப்பு முகாமில் வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளில் 11 ஆயிரத்து 850 பேர் விண்ணப்பங்களை அளித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 9 ஆயிரத்து 706 பேர் விண்ணப் பங்களை அளித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் 4 சட்டப்பேரவை தொகுதிகளில் 10 ஆயிரத்து 609 பேர் விண்ணப்பங்கள் வழங்கியுள்ளனர்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 2-ம் நாள் நடைபெற்ற இறுதி சிறப்பு சுருக்க திருத்த முகாம் முடிவில் வேலூர் மாவட்டத்தில் (முதல் நாளுடன் சேர்த்து) 19 ஆயிரத்து 188 பேரும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 699 பேரும், திருப்பத்தூர் மாவட்டத்தில் 17 ஆயிரத்து 363 பேர் என மொத்தமாக 52 ஆயிரத்து 250 பேர் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர்.

3 மாவட்டங்களில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாமை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் நேரில் ஆய்வு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x