Published : 12 Dec 2020 03:17 AM
Last Updated : 12 Dec 2020 03:17 AM

நாளை காவலர் பணிக்கான தேர்வு மதுரையில் 37,550 பேர் எழுதுகின்றனர்

மதுரை: மதுரை மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வு நாளை (டிச.13) நடக்கிறது. இதற்காக 42 தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 31,760 ஆண்கள், 5,790 பெண்கள் என மொத்தம் 37,550 பேர் இத்தேர்வை எழுதுகின்றனர். கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தேர்வில் பங்கேற்போர் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தேர்வு அனுமதிச்சீட்டு, எழுது பொருட்களை மட்டுமே கொண்டுவர வேண்டும். மொபைல்போன், கைப்பை, புத்தகங்கள் போன்ற பொருட்களுக்கு அனுமதி இல்லை என மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x