Published : 11 Dec 2020 07:30 AM
Last Updated : 11 Dec 2020 07:30 AM
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகிறது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளன.
காலியாக உள்ள பணியிடங்கள் விவரம் வருமாறு: 21 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடம் (தமிழ், ஆங்கிலம் தலா 3, கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வணிகவியல், வரலாறு தலா 2 இடங்கள் மற்றும் ஒரு உயிரியியல் ) 37 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் (தமிழ், சமூக அறிவியல் தலா 4 இடங்கள், ஆங்கிலம், கணிதம் தலா 11, அறிவியல் 7) மற்றும் 6 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன.
விண்ணப்பங்களை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அறை எண் 305-ல் உள்ள பழங்குடியினர் நலதிட்ட அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி வரை அலுவலக நேரங்களில் அளிக்கலாம்.
மேலும், விண்ணப்பங்களை திட்டஅலுவலர், பழங்குடியினர் நலம், சேலம் என்ற முகவரிக்கு வரும் 24-ம் தேதி மாலைக்குள் அனுப்ப வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT