Published : 07 Dec 2020 03:15 AM
Last Updated : 07 Dec 2020 03:15 AM

பூட்டிய வீடு, கணினி மையத்தில் மடிக்கணினி, மொபைல்கள் திருட்டு

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மனைவி மீனாட்சி. இவர் கடந்த 28-ம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். பின்னர் டிச. 5-ல் வீடு திரும்பினார். அப்போது, கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த விலை உயர்ந்த 2 மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.

செல்லூர் அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவர் திருப்பாலை- உச்சப் பரம்பு மேடு சாலையில் கணினி மையம் நடத்தி வருகிறார். கடந்த 4-ம் தேதி மையத்தை மூடிவிட்டுச் சென்றார். அடுத்த நாள் வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே இருந்த கணினி, பிரிண்டர் இயந்திரம், மானிட்டர், மொபைல் போன், மடிக்கணினி, சிசிடிவி பிளேயர் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்து புகாரின்பேரில் தல்லாகுளம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x