Published : 29 Nov 2020 03:12 AM
Last Updated : 29 Nov 2020 03:12 AM

மாரடோனா மறைவுக்கு அஞ்சலி

கால்பந்து விளையாட்டு வீரர் மாரடோனா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்திய ஜனநாயக வாலிபர் சங்க மதுரை மாநகர் விளையாட்டுக் கழகத்தினர்.

மதுரை: இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மதுரை மாநகர் விளையாட்டுக் கழகம் சார்பில் மறைந்த கால்பந்து விளையாட்டு வீரர் மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பகுதி குழு செயலாளர் க.செந்தில் தலைமை வகித்தார். சிலம்பம் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். சங்க மாவட்ட தலைவர் பி.கோபிநாத், சிலம்பாட்டப் பயிற்சி பள்ளி ஆசிரியர் கோ.வடிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x