Published : 29 Nov 2020 03:13 AM
Last Updated : 29 Nov 2020 03:13 AM

அஸ்வின்ஸில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடக்கம்

திருச்சி

அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனத்தில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அஸ்வின்ஸ் நிறுவனர் கே.ஆர்.வி. கணேசன் கூறியது:

ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு பாரம்பரியம் உண்டு. அதில் கிறிஸ்துமஸ் கேக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கிறிஸ்துமஸில் கேக் மிகப் பாரம்பரியமான ஒன்று. அதை செய்யத் தொடங்குவதே ஒரு திருவிழாவின் தொடக்கமாகும். செர்ரி, உலர் திராட்சை, ஆரஞ்சு தோல், முந்திரி, ஆப்பிரிகாட், டியூட்டி புரூட்டிச், பேரீச்சை ஆகியவற்றுடன், ஜாதிக்காய் பொடி, லவங்கப்பட்டைப் பொடி போன்றவற்றை கலந்து ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்பாகவே ஒயினில் ஊற வைப்போம். இந்த பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இவை நன்றாக ஊறிய பின்னர், சுவையான தரமான கிறிஸ்துமஸ் கேக் தயாரித்து விற்பனைக்கு அனுப்புவோம். இந்த ஆண்டு, கிறிஸ்துமஸ் காம்போவை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம். அதில் கிறிஸ்துமஸ் ப்ளம் கேக், கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் குக்கீஸ், சாக்லேட் ஆகியவை நியாயமான விலையில் எங்களது அனைத்து கிளைகளிலும் கிடைக்கும்.

இந்த கடினமான காலத்தில் நமக்கெல்லாம் பண்டிகைகள் தான் ஒரு ஆறுதல். அதனால், இந்த விழாக்களை மகிழ்வுடனும், பாதுகாப்புடனும் கொண்டாட அனைவருக்கும் அஸ்வின்ஸ் குழுமத்தின் சார்பில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x