Published : 28 Nov 2020 03:17 AM
Last Updated : 28 Nov 2020 03:17 AM

நாகர்கோவில்-மும்பை இடையே அடுத்த வாரம் சிறப்பு ரயில்கள்

மதுரை

நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக மும்பைக்கு டிசம்பர் முதல் வாரம் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

இதன்படி டிச.7 முதல் திங்கள், செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் நாகர்கோவிலில் இருந்து சிறப்பு ரயில் (வண்டி எண் 06340) காலை 6 மணிக்குப் புறப்படும். இது மதுரையில் இருந்து பகல் 11 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் இரவு 7.15 மணிக்கு மும்பை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் டிச.8 முதல் செவ்வாய், புதன், வியாழன், சனி ஆகிய கிழமைகளில் மும்பையில் இருந்து (வண்டி எண் 06339) இரவு 8.35 மணிக்கு புறப்பட்டு வியாழன், வெள்ளி, சனி, திங்கள் ஆகிய கிழமைகளில் காலை 10.20 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த ரயில்கள் வள்ளியூர், நாங்குநேரி, நெல்லை, கோவில் பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், திருப்பத்தூர், காட்பாடி, சித்தூர், மதனப்பள்ளி ரோடு, கதிரி, தர்மாவரம், அனந்தப்பூர், குண்டக்கல், அடோனி, மந்த் ராலயம் ரோடு, ரெய்ச்சூர், யாட்கிர், கலபுரகி, சோலாப்பூர், குர்ட்வாடி, டான்ட், புனே, கல்யாண், தானே, தாதர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த சிறப்பு ரயில்களில் ஒரு குளிர் சாதன இரண்டுக்கு படுக்கை வசதி பெட்டி, நான்கு குளிர் சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், பத்து இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், இரண்டு இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

மும்பை சிறப்பு ரயில் நாமக்கல் ரயில் நிலையத்திலும், நாகர்கோவில் சிறப்பு ரயில் மகாராஷ்டிர மாநிலம் கர்ஜாட் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும் என ரயில்வே அதி காரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x