Published : 28 Nov 2020 03:17 AM
Last Updated : 28 Nov 2020 03:17 AM

மனித உரிமை காவல் பிரிவு சார்பில் இந்திய அரசியலமைப்பு தின விழா

இந்திய அரசியலமைப்பு தின விழாவில் பேசினார் காவல் உதவி ஆணையர் சிவக்குமார்.

மதுரை: மதுரை மாநகர் சமூக நீதி மற்றும் மனித உரிமைக் காவல் பிரிவு சார்பில், இந்திய அரசியலமைப்பு தின விழா பழங்காநத்தத்தில் நேற்று நடந்தது. சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆணையர் சிவக்குமார் தலைமை வகித்தார். மனித உரிமை காவல் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் தரன் வரவேற்றார். மதுரை மாவட்டக் குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பாண்டியராஜா, மாவட்ட நலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் மலைச்சாமி ஆகியோர் பேசினர். காவல் உதவி ஆய்வாளர் போஸ் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சட்டம் உட்பட பல்வேறு தலைப்புகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x