Published : 28 Nov 2020 03:17 AM
Last Updated : 28 Nov 2020 03:17 AM

அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள்கோயில் உண்டியல்கள் திறப்பு

அழகர்கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட பக்தர்கள்.

மதுரை: மதுரை மாவட்டம், அழகர்கோவிலிலுள்ள சுந்தரராஜப் பெருமாள் கோயில் உண்டியல்கள் திருக்கல்யாண மண்டப வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டன. இதில் 46 லட்சத்து 27 ஆயிரத்து 803 ரூபாய், தங்கம் 25 கிராம், வெள்ளி 410 கிராம் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்தி இருந்தனர்.

உண்டியல் திறப்பின்போது கோயில் நிர்வாக அலுவலர் அனிதா, உதவி அலுவலர் விஜயன், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை மேலாளர்கள் உடன் இருந்தனர்.

உண்டியல் பணம் எண்ணும் பணியில் ஈடுபட்ட கோயில் பணியாளர்கள், பெண்கள் பக்தர் பேரவையினர், வங்கி ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x