Published : 28 Nov 2020 03:17 AM
Last Updated : 28 Nov 2020 03:17 AM
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் இரண்டு பெயர்களை நீக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மதுரை செக்கானூரணி காவல் ஆய்வாளர் அனிதா கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம் அருகே உள்ள பொன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. இவருக்கும், அடுத்த வீட்டில் வசிக்கும் நல்லதம்பிக்கும் முன்விரோதம் இருந்தது. இது தொடர்பாக கடந்த 2017-ல் ஏற்பட்ட தகராறில் முத்து, அவரது மனைவி ஆகியோர் தாக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் செக்கானூரணி போலீஸார் நல்லதம்பி உட்பட 7 பேரைக் கைது செய்தனர். இவ்வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகையை தயாரிக்க அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதை அறிந்த நல்லதம்பி அடிதடி சம்பவத்துக்கு சம்பந்த மில்லாத தனது மகன்கள் மாரி, கமலக்கண்ணன் ஆகியோரது பெயர்களை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கக் கோரி தற்போதைய செக்கானூரணி காவல் ஆய்வாளர் அனிதாவை அணுகினார்.
அதற்கு அவர் ரூ.1 லட்சம் லஞ்சம் கேட்டார். இதற்கு நல்லதம்பி ரூ.80 ஆயிரம் கொடுக்க சம்மதம் தெரிவித்தார். முதல் கட்டமாக ரூ.30 ஆயிரம் வழங்கவும், பெயர்களை நீக்கிய பிறகு மீதம் உள்ள தொகையை வழங்கவும் ஒப்புக் கொண்டார்.
இதனிடையே லஞ்சம் கொடுக்க விரும்பாத நல்லதம்பி, மதுரை லஞ்ச ஒழிப்புப் போலீ ஸில் புகார் அளித்தார். அவர் களது யோசனைப்படி ரசாயனம் தடவிய ரூ.30 ஆயிரம் நோட்டு களுடன் நேற்று முன்தினம் இரவு செக்கானூரணி காவல் நிலையத்துக்கு நல்லதம்பி சென் றார். அங்கிருந்த ஆய்வாளர் அனிதாவிடம் ரூ.30 ஆயிரத்தைக் கொடுத்தார். அப்போது வெளியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யசீலன், ஆய்வாளர்கள் ரமேஷ்பிரபு, குமரகுரு, கண் ணன், சூரியகலா ஆகியோர் அனிதாவைப் பிடித்தனர். நல்ல தம்பியிடம் இருந்து வாங்கிய லஞ்சப் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து அவரை நேற்று கைதுசெய்து மதுரை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறை யில் அடைத்தனர்.
இதனிடையே கைதான காவல் ஆய்வாளர் அனிதாவை தற்கா லிகப் பணி நீக்கம் செய்து மதுரை சரக டிஐஜி ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
அனிதா நத்தத்தைச் சேர்ந்தவர். 2004-ல் எஸ்.ஐ.யாகப் பணியில் சேர்ந்த இவர் அண்மையில்தான் ஆய்வாளராகப் பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது கணவர் செங்கல்சூளை நடத்தி வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT