Published : 28 Nov 2020 03:17 AM
Last Updated : 28 Nov 2020 03:17 AM
காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பருவ மழை பொய்க்காமல் பெய்ததின் காரணமாக மேட்டூர் அணை நீர் மட்டம், இந்தாண்டு நான்காவது முறையாக நேற்று 100 அடியை எட்டியுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன் தினம் விநாடிக்கு 6,512 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று காலை விநாடிக்கு 8,111 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 500 கன அடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 250 கன அடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. நீர் வரத்தை காட்டிலும், நீர் திறப்பு குறைவாக உள்ளதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. நேற்று முன்தினம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 99.32 அடியாக இருந்தது, நேற்று காலை 99.32 அடியில் இருந்து, மாலையில் அணையின் நீர் மட்டம் 100 அடியை எட்டியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT