Published : 24 Nov 2020 03:15 AM
Last Updated : 24 Nov 2020 03:15 AM

திமுக மாவட்டச் செயலாளரைக் கண்டித்து திருச்சியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

திமுக மாவட்டச் செயலாளரைக் கண்டித்து அதிமுக திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி, திமுக திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி தியாகராஜனைக் கண்டித்து அதிமுக திருச்சி புறநகர் வடக்கு, புறநகர் தெற்கு ஆகிய மாவட்டங்கள் சார்பில் அண் மையில் தனித்தனியாக ஆர்ப் பாட்டங்கள் நடைபெற்றன. இந் நிலையில், திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் மாவட்ட அவைத் தலைவர் அய்யப்பன் தலைமையில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆவின் தலைவர் சி.கார்த்திகேயன் மற்றும் அணி நிர்வாகிகள் தமிழரசி, வழக்கறிஞர் ராஜ்குமார், பத்மநாபன், பூபதி உட்பட 2,500-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். கட்சியின் பேச்சாளர் நெத்தியடி நாகையன் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட் டத்தால் சிந்தாமணி பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x