Published : 23 Nov 2020 03:12 AM
Last Updated : 23 Nov 2020 03:12 AM

திருச்சியில் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்க நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

தமிழ்நாடு வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.

ஆம்னி பேருந்து நிலையத்தை யொட்டி உள்ள உப்பு சத்தியாகிரக நினைவுத் தூண் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அமைப்பின் மாநிலத் தலைவர் இ.எம்.ஆறுமுகம் தலைமை வகித்து, மாநில நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில், ஆண்டுதோறும் வேதாரண்யத்துக்கு உப்பு சத்தியாகிரக நடைபயணம் மேற்கொள்ளும் குழுவினர் கவுரவிக்கப்பட்டனர்.

இதில், அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பி.பன்னீர்செல்வம், துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ஜெஸ்டின்ராஜா, மாநில பேச்சாளர்கள் எம்.கருப்பையா, டி.சக்தி செல்வகணபதி, திருச்சி மாவட்டத் தலைவர் என்.சண் முகம், மாவட்டப் பொதுச் செயலாளர் பி.தர்மராஜ், நேரு இளையோர் மன்ற அலுவலர் கே.சுப்பிரமணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x