Published : 20 Nov 2020 03:15 AM
Last Updated : 20 Nov 2020 03:15 AM

கரோனா காலத்தில் எழுதிய கவிதை நூல் வெளியீட்டு விழா

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆசிரியர் கனியன் செல்வராஜ் எழுதிய கவிதை நூலை ஆவணப்பட இயக்குநர் வினோத் மலைச்சாமி வெளியிட பெற்றுக் கொண்டார் பி.எஸ். தொழில் குழும மேலாளர் சகீலா.

மதுரை: மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்தவர் கனியன் செல்வராஜ். ஆசிரியரான இவர், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தன்னார்வத்துடன் பயிற்சி அளித்து வருகிறார்.இவர் இதுவரை 5 கவிதை நூல்களும், வாழ்க்கைக்கு வழி என்னும் தன்னம்பிக்கை நூலும் எழுதியுள்ளார்.

இந்நிலையில் கரோனா காலத்தில் எழுதிய ‘ஆதாம் இல்லாத இரவு’ என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா மதுரை உலகத் தமிழ்ச் சங்க வளாகத்தில் நடந்தது. ஆவணப்பட இயக்குநர் வினோத் மலைச்சாமி புத்தகத்தை வெளியிட்டார். பி.எஸ். தொழில் குழும மேலாளர் சகீலா பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் ஆசிரியர் கனியன் செல்வராஜ், எழுத்தாளர்கள் பாக்கியராஜ், ரத்தினக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x