Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க திமுக முகவர்கள் இன்று ஆலோசனை

மதுரை: மதுரை புறநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ. வெளியிட்ட அறிக்கை:

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிய நிலையில், வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நவ.21, 22 மற்றும் டிச.12, 13 தேதிகளில் நடக்கவுள்ளன. அப்போது விடுபடாமல் வாக்காளர்களைச் சேர்ப்பதில் கட்சியினர் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்த ஆலோசனை நடக்கவுள்ளது.

மேலூர் தொகுதிக்கு மூவேந்தர் பண்பாட்டுக்கழகம் மண்டபத்தில் காலை 9 மணிக்கும், மதுரை கிழக்கு தொகுதிக்கு திருப்பாலை குறிஞ்சி மகாலில் காலை 11 மணிக்கும், சோழவந்தான் தொகுதிக்கு அலங்காநல்லூர் கேட்டுக்கடை ராசு ஆசாரி-அங்கம்மாள் திருமண மகாலில் மாலை 4 மணிக்கும் கூட்டம் நடக்கும். வாக்குச்சாவடி முகவர்கள், மாவட்ட, ஒன்றிய, நகர், பேரூராட்சி, ஊராட்சிச் செயலாளர்கள் பங்கேற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x