Published : 19 Nov 2020 03:14 AM
Last Updated : 19 Nov 2020 03:14 AM

அனைத்து தொழிற்சங்கத்தினர் மதுரையில் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில் தொமுச, சிஐடியூ, ஏஐடியூசி உட்பட அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நவ.26-ல் அகில இந்திய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது குறித்த விளக்கக் கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தொமுச மாநில செயலாளர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநிலச் செயலாளர் நந்தாசிங், சிஐடியு மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு வழங்கக் கூடாது. புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x