Published : 18 Nov 2020 03:14 AM
Last Updated : 18 Nov 2020 03:14 AM

சமயபுரத்தில் 42.40 மிமீ மழை

திருச்சி

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் நேற்று காலையுடன் முடிந்த 24 மணிநேரத்தில் சமயபுரத்தில் அதிகபட்சமாக 42.40 மிமீ மழை பதிவாகியது.

மாவட்டத்தின் பிற இடங்களில் பெய்த மழை யளவு (மில்லி மீட்டரில்): தாத்தையங்கார்பேட்டை 25, துறையூர், பொன்மலை தலா 24, திருச்சி ஜங்ஷன் 21, தேவிமங்கலம், முசிறி தலா 18, புள்ளம்பாடி 17.40, லால்குடி 15, விமான நிலையம் 14.60, நந்தியாறு தலைப்பு 12.60, கல்லக்குடி 10.20, கொப்பம்பட்டி 10, புலிவலம் 9, நவலூர் குட்டப்பட்டு 8.20.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டத்தில் கரூர், குளித்தலை, அரவக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று தொடர்ந்து விட்டு, விட்டு மழை பெய்தது. கரூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழையளவு (மில்லி மீட்டரில்): கரூர் 41, க.பரமத்தி 39, பஞ்சப்பட்டி 30.40, மாயனூர் 24, கிருஷ்ணராயபுரம் 20.20, அணைப்பாளையம் 15, குளித்தலை 8, தோகைமலை 6, மைலம்பட்டி 5, அரவக்குறிச்சி 4.30.

அரியலூர் மாவட்டத்தில்...

அரியலூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் இரவு வரை விட்டு விட்டு மழை பெய்தது. இதனால், நேற்று முழுவதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை காணப்பட்டது. மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்): ஜெயங்கொண்டம் 6, அரியலூர் 5.2, செந்துறை 4.6, திருமானூர் 4.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x