Published : 13 Nov 2020 03:16 AM
Last Updated : 13 Nov 2020 03:16 AM

பயணிகள் நெரிசலை தவிர்க்க தென்மாவட்ட ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

மதுரை

தீபாவளிப் பண்டிகையை முன் னிட்டு பயணிகள் நெரிசலைத் தவிர்க்க சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக் கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு ள்ளன.

இதன்படி நவ.12 முதல் சென்னை எழும்பூர்-செங்கோட் டை வாரம் மும்முறை சிறப்பு ரயிலில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட நான்கு பெட்டிகளும், எழும்பூர்-கொல்லம் சிறப்பு ரயில், எழும்பூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில், எழும்பூர்-செங்கோட்டை சிறப்பு ரயில் ஆகியவற்றில் முறையே இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டியும், எழும்பூர்-நாகர்கோவில் வாரம் இருமுறை சிறப்பு ரயிலில் இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதி கொண்ட ஆறு பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும் எழும்பூர்-கன்னியா குமரி-எழும்பூர், எழும்பூர்-தூத்துக் குடி-எழும்பூர் ஆகிய சிறப்பு ரயில்களில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. வண்டி எண் 02605 எழும்பூர்-காரைக்குடி சிறப்பு ரயிலில் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இத்த கவலை மதுரை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x