Published : 11 Nov 2020 03:18 AM
Last Updated : 11 Nov 2020 03:18 AM

ரங்கம் கோயில் ஊஞ்சல் உற்சவத்தில் இன்று தீர்த்தவாரி

திருச்சி

திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவத்தின் 9-ம் நாளான இன்று(நவ.11) தீர்த்தவாரி நடைபெற உள்ளது.

ரங்கம் ரங்கநாதர் கோயி லில் நம்பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நவ.3-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஊஞ்சல் உற்சவத்தின் 7-ம் திருநாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திருந்து புறப்பட்டு கொட்டார வாசலில் நெல்லளவு கண்டருளினார்.

தொடர்ந்து, நேற்று ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவின் நிறைவு நாளான இன்று (நவ.11) காலை 9.45 மணிக்கு நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளுகிறார்.

விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பொன்.ஜெயராமன் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x