Published : 05 Nov 2020 03:13 AM
Last Updated : 05 Nov 2020 03:13 AM

மதுரையில் ஆம்புலன்ஸ் ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு

மதுரை: மதுரை வளர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் மன்சூர் அலிகான். தனியார் நிறுவனத்துக்கான பணியாட்களை தேர்வு செய்யும் நிறுவனம் நடத்துகிறார். இவரது மனைவி ஜெமிளா பர்வீன், 108 ஆம்புலன்சில் தொழில்நுட்பநராகப் பணிபுரிகிறார். கடந்த 2-ம் தேதி மன்சூர் அலிகான் வெளியூர் சென்ற நிலையில், அவரது மனைவியும் வேலைக்குச் சென்றுவிட்டார். 3-ம் தேதி காலையில் அவர்களது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதில் 10 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. புதூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இரவில் ரூ. 6.70 லட்சம், 6 பவுன் நகை மாயம்

உத்தங்குடியைச் சேர்ந்தவர் அல்லா பிச்சை. வெளிநாட்டில் பணிபுரிந்த இவர், 3 மாதங்களுக்கு முன்பு உத்தங்குடி திரும்பினார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் அல்லா பிச்சை- மனைவி தூங்கிய அறையிலுள்ள பீரோவில் இருந்து ரூ. 6.70 லட்சம் மற்றும் 6 பவுன் மாயமானது காலையில் தெரியவந்தது. இதுகுறித்து புதூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x