Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை நரம்பியல் மருத்துவத் துறை சார்பில், உலக பக்கவாத நோய் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. நரம்பியல் துறைத் தலைவர் பி.கே.முருகன் வரவேற்றார். விழாவைத் தொடங்கி வைத்து டீன் சங்குமணி பேசுகையில், "பக்கவாத நோய் என்பது மாரடைப்புக்கு அடுத்தபடியாக இறப்புக்கு முக்கிய காரணமாகும். இந்த நோயைத் தடுக்க உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம்,’’ என்றார்.
நரம்பியல் துறை பேராசிரியர்கள் எம்.ஆர்.மணிவண்ணன், ஜஸ்டின், கணேசபாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT