Published : 31 Oct 2020 03:14 AM
Last Updated : 31 Oct 2020 03:14 AM

மாரடைப்புக்கு அடுத்து பக்கவாதம் இறப்புக்கு முக்கிய காரணம்: டீன் சங்குமணி தகவல்

மதுரை: மாரடைப்புக்கு அடுத்தபடியாக இறப்புக்குப் பக்கவாத நோய் முக்கிய காரணமாக உள்ளதாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் சங்குமணி தெரிவித்தார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மூளை நரம்பியல் மருத்துவத் துறை சார்பில், உலக பக்கவாத நோய் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. நரம்பியல் துறைத் தலைவர் பி.கே.முருகன் வரவேற்றார். விழாவைத் தொடங்கி வைத்து டீன் சங்குமணி பேசுகையில், "பக்கவாத நோய் என்பது மாரடைப்புக்கு அடுத்தபடியாக இறப்புக்கு முக்கிய காரணமாகும். இந்த நோயைத் தடுக்க உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம்,’’ என்றார்.

நரம்பியல் துறை பேராசிரியர்கள் எம்.ஆர்.மணிவண்ணன், ஜஸ்டின், கணேசபாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x