Published : 25 Jul 2025 11:34 PM
Last Updated : 25 Jul 2025 11:34 PM
சென்னை: இந்தியாவில் ரியல்மி 15 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போனுடன் ரியல்மி 15 5ஜி போனும் வெளிவந்துள்ளது.
உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது.
ஒப்போவின் துணை நிறுவனமாக சந்தையில் களம் கண்டு, பின்னர் தனியொரு பிராண்டாக ரியல்மி உருவானது. பிரீமியம் விலையிலான போன்களையும் சந்தையில் விற்பனை செய்கிறது. தற்போது ரியல்மி 15 சீரிஸ் வரிசையில் ரியல்மி 15 புரோ மற்றும் ரியல்மி 15 5ஜி போன்கள் அறிமுகமாகி உள்ளன.
ரியல்மி 15 புரோ ஸ்மார்ட்போன் சிறப்பு அம்சங்கள் என்னென்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT