Published : 28 May 2025 08:47 AM
Last Updated : 28 May 2025 08:47 AM

பெங்களூருவில் தொழில்நுட்ப பணியாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி சாதனை

புதுடெல்லி: ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான சிபிஆர்இ, “ குளோபல் டெக் டேலண்ட் கைடுபுக் 2025" என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: உலகளாவிய சக்திவாய்ந்த தொழில்நுட்பம் கொண்ட 12 மையங்களில் பெங்களூருவும் அடங்கும். பெய்ஜிங், பாஸ்டன், லண்டன், நியூயார்க் மெட்ரோ, பாரிஸ், சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி, சியாட்டில், ஷாங்காய், சிங்கப்பூர், டோக்கியோ மற்றும் டொராண்டோ ஆகியவை பிற தொழில்நுட்ப சக்தி மையங்களாகும்.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மிகப்பெரிய தொழில்நுட்ப திறமைவாய்ந்த சந்தையாக பெங்களூரு உள்ளது. அதன் தொழில்நுட்ப பணியாளர்கள் எண்ணிக்கை 1 மில்லியனை (10 லட்சம்) தாண்டி சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் , பெங்களூரு நகரம் உலகளாவிய தொழில்நுட்ப சந்தையில் முக்கிய மையமாக மாறியுள்ளது.

28 யூனிகார்ன் நிறுவனங்களை உள்ளடக்கிய பெங்களூருவின் ஸ்டார்ட் அப் சூழல் சாதகமான வணிக விதிமுறை மற்றும் வலுவான நிறுவன ஆதரவிலிருந்து பெரிதும் பயனடைந்து வருவதாக அந்த அறிககையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x