Published : 19 May 2025 06:37 AM
Last Updated : 19 May 2025 06:37 AM
சைபர் குற்றங்கள் என்றாலே, பெரும் பாலும் எல்லாருமே இணையம் வழியாகப் பணம் திருட்டு, பொருளாதாரம் சார்ந்த குற்றங்கள் என்று மட்டுமே நினைக்கிறார்கள். ஆனால், இவற்றைவிட இணையக் குற்றங்களில் அதிகம் நடப்பது பாலியல் ரீதியிலான குற்றங்கள்தான்.
இந்த சமூக ஊடக யுகத்தில் எந்தப் பெண்ணையும் மெசஞ்சர் வழியாக அணுக முடியும் என்பதால், இதில் நடக்கும் குற்றங்களும் மிக அதிகம். ஆனால், இதில் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் பெரும்பாலும் காவல் நிலையங்களை நாடுவது குறைவுதான். ஆனால், வேலூரில் சமூக ஊடகம் மூலம் பாதிப்பில் சிக்க நேர்ந்த ஓர் இளம் பெண், சரியான நேரத்தில் துணிச்சலுடன் செயல்பட்டதால், சிக்கலிலிருந்து தப்பினார். அவருடைய கதை மற்ற பெண்களுக்குப் பாடம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT