Published : 18 Jul 2014 09:21 AM
Last Updated : 18 Jul 2014 09:21 AM

சிகிச்சைக்கு வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற மருத்துவர் கைது: தீயை வரவழைத்து மந்திரவாதி என மிரட்டல்

சிகிச்சைக்கு வந்த இளம்பெண்ணிடம் மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் தவறாக நடக்க முயன்ற யுனானி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை எழும்பூரில் யுனானி வைத்தியசாலை வைத்திருப்பவர் டாக்டர் அல்டாப் உசேன்(28). இந்த வைத்தியசாலைக்கு ராயப் பேட்டையை சேர்ந்த முத்துலட்சுமி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம்பெண் தன் தாயுடன் கடந்த 10-ம் தேதி சென்றுள்ளார். வயிற்று வலி, நெஞ்சு வலி இருப்பதாக டாக்டர் உசேனிடம் கூறினார்.

தனியாக அழைத்து

முத்துலட்சுமியை மட்டும் உசேன் தனியே அழைத்து பரிசோதனை செய்துள்ளார். அப்போது முத்துலட்சுமியிடம் அவர் முறைகேடாக நடந்துள்ளார். ஆனால் அதை முத்துலட்சுமி யாரிடமும் சொல்லவில்லை. அடுத்தடுத்த நாட்களும் முத்துலட்சுமியை சிகிச்சைக்கு வரச் சொன்னார் உசேன். 12-ம் தேதி சென்றபோதும் மருத்துவப் பரிசோதனை என்று கூறி முத்துலட்சுமியை தனியாக அழைத்து எல்லை மீறி நடந்திருக்கிறார். தன்னை தவறான நோக்கத்துடன் டாக்டர் தொடுகிறார் என்பதை புரிந்துகொண்ட முத்துலட்சுமி அவரை எச்சரித்துள்ளார்.

சுதாரித்துக்கொண்ட உசேன், திடீரென ஒரு டம்ளரை மேஜையில் வைத்தார். ‘‘நான் டாக்டர் மட்டுமல்ல; மந்திரவாதியும்கூட’’ என்று கூறியபடியே ஏதோ மந்திரங்கள் செய்வதுபோல சைகை காட்டிவிட்டு, அந்த டம்ளரில் நெருப்பை வரவழைத்திருக்கிறார். ‘‘சாதாரண டம்ளர் பற்றியெரிந்ததைப் பார்த்தாயா. நான் உன்னிடம் நடந்துகொண்டதைப் பற்றி வெளியே சொன்னால், மந்திர சக்தியால் உன் குடும்பத்தையே பொசுக்கிவிடுவேன்’’ என்று கூறி மிரட்டியுள்ளார்.

பயந்துபோன முத்துலட்சுமி 2 நாட்களுக்குப் பிறகு, எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, அல்டாப் உசேனை போலீஸார் வியாழக்கிழமை காலை கைது செய்தனர். கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸார் எழும்பூர் 14-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பழிவாங்க ஆசிட் வீச்சு

வேப்பேரியில் அல்டாப் உசேன் மீது சில நாட்களுக்கு முன்பு ஒரு கும்பல் ஆசிட் வீசியது. இதில் அவரது முகம், நெஞ்சு பகுதிகள் பாதிக் கப்பட்டன. இதுதொடர்பாக ஏற்கெனவே 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிகிச்சைக்கு வந்த வேறொரு பெண்ணிடம் அவர் தவறாக நடந்துள்ளார். அதற்கு பழிவாங்கவே அவர் மீது ஆசிட் வீசப்பட் டிருக்கிறது என்று விசாரணையில் தெரியவந்தது. மருத்துவப் பரிசோதனை என்ற பெயரில் மேலும் பல பெண்களிடம் அவர் தவறாக நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. உசேனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x