Published : 09 Oct 2022 04:45 AM
Last Updated : 09 Oct 2022 04:45 AM

இந்து கடவுளை விமர்சிப்பவர்களை கடுமையாக தண்டிக்க சட்டம் கொண்டு வரவேண்டும்: சடகோப ராமானுஜ ஜீயர்

உடுமலை

இந்து கடவுளை விமர்சிப்பவர்களை கடுமையாக தண்டிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வரவேண்டும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கூறினார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திருப்பதி கோயிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு திருவேங்கட பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

இதில் சிறப்பு விருந்தினராக ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்துக்களிடம் ஒற்றுமை ஏற்படவேண்டும். இந்து மதத்தை அவதூறாக பேச இப்போது நிறைய பேர் கிளம்பியுள்ளனர். ஆ.ராசா போன்றவர்களை முதல்வர் ஸ்டாலின் அருகில் வைத்துகொண்டால் அவருக்கும் அவப்பெயர் உண்டாகும்.

இந்து கடவுளை விமர்சிப்பவர்களை கடுமையாக தண்டிக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x