Published : 08 Jul 2022 04:10 AM
Last Updated : 08 Jul 2022 04:10 AM

சேலம் | உள்ளாட்சி இடைத்தேர்தல் - டாஸ்மாக் கடைகள் மூடல்

சேலம்

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் தேர்தல் நடைபெறும் பகுதியில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, நேற்று (7-ம் தேதி) காலை 10 மணி முதல் நாளை (9-ம் தேதி) நள்ளிரவு 12 மணி வரை, 10 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுகிறது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 12-ம் தேதி அன்று முழுவதும் 13 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும்.

குறிப்பாக, சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 5 கிமீ சுற்றளவுக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி, இனாம்வேடுகாத்தாம்பட்டி, பொட்டனேரி ஆகிய கிராம ஊராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட 10 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுகிறது.

மேலும், 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து, 5 கிமீ., சுற்றளவுக்குள் அமைந்துள்ள காடையாம்பாட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்லைக்கு உட்பட்ட 2 மதுபான கடைகள், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்லைக்கு உட்பட்ட 8 மதுபான கடைகள், தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலக எல்லைக்கு உட்பட்ட 3 மதுபான கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்படும்.

இதை மீறி மது விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x