Published : 27 Apr 2022 06:00 AM
Last Updated : 27 Apr 2022 06:00 AM

எர்ணாகுளம் - கோரக்பூர் இடையே கோவை வழியாக சிறப்பு ரயில்கள் 30-ம் தேதி முதல் இயக்கம்

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “மே, ஜூன் மாதங்களில் பயணிகள் நெரிசலை தவிர்க்கும் வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர்- கேரள மாநிலம் எர்ணாகுளம் இடையிலான சிறப்பு ரயில் (எண்:05303), வரும் 30-ம் தேதி முதல் ஜூன் 25-ம் தேதி வரை சனிக்கிழமைகளில், காலை 8.30 மணிக்கு கோரக்பூரிலிருந்து புறப்பட்டு, திங்கட்கிழமைகளில் நள்ளிரவு 12 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

இதேபோல, எர்ணாகுளம்-கோரக்பூர் இடையிலான சிறப்பு ரயில் (எண்:05304), வரும் மே 2-ம் தேதி முதல் ஜூன் 27-ம் தேதி வரை திங்கட்கிழமைகளில் இரவு 11.55 மணிக்கு எர்ணாகுளத்திலிருந்து புறப்பட்டு, வியாழக்கிழமைகளில் காலை 8.35 மணிக்கு கோரக்பூர் சென்றடையும். இந்த ரயில்கள் ஆலுவா, திருச்சூர், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர் ரயில்நிலையங்களில் நின்று செல்லும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x