Published : 16 Jun 2014 08:19 AM
Last Updated : 16 Jun 2014 08:19 AM

பாலியல் பலாத்கார வழக்கு: இளைஞர்கள் சிறையில் அடைப்பு

பொள்ளாச்சி விடுதியில் தங்கியி ருந்த சிறுமிகளிடம் பலாத்காரத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளிடம் சந்தேகத்துக்கிடமான நபர்க ளின் புகைப்படங்களைக் காண் பித்து போலீஸார் விசாரித்தனர். அவர்களில் வீராச்சாமி (23) என்ப வரைப் பொள்ளாச்சி ரயில் நிலையத் தில் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். அவருடன் தொடர் புடைய நண்பர்கள் கோபிநாத் (23), அரவிந்த் (19) இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இதில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட வீராச்சாமி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர் குற்றத்தை ஒப்புக் கொண் டதையடுத்து சனிக்கிழமை நள்ளிரவு 1 மணி அளவில் பொள்ளாச்சி நடுவர் நீதிமன்ற நீதிபதி லிங்கம் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, வீராச் சாமியை 15 நாள் நீதிமன்றக் காவ லில் வைக்க உத்தரவிட்டார். இதை யடுத்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது நண்பர்கள் கோபிநாத், அரவிந்த் ஆகியோர் மீது கத்தியைக் காண்பித்து மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டதாகப் பொள்ளாச்சி கிழக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். இவர்களும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x