Published : 21 Apr 2022 06:02 AM
Last Updated : 21 Apr 2022 06:02 AM

கோவை வழியாக இயக்கப்படும் 4 எக்ஸ்பிரஸ் ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்

கோவை: சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “சேலம்-மேக்னசைட் ரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள இரு ரயில்வே பாலங்களில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 23, 30-ம் தேதிகளில் (சனிக்கிழமை) கீழ்கண்ட ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

ஆலப்புழாவிலிருந்து தன்பாத்துக்கு காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:13352), 3 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு ஆலப்புழாவிலிருந்து புறப்பட்டுச் செல்லும். இதேபோல, எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12678), எர்ணாகுளத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்படுவதற்கு பதில், 12.10 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.

கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:12244), கோவையிலிருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்படுவதற்கு பதில், மாலை 4.05 மணிக்கு புறப்பட்டுச் செல்லும். கோவை-சென்னை சென்ட்ரல் இடையிலான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், பிற்பகல் 3.15 மணிக்கு புறப்படுவதற்கு பதில், மாலை 4.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x