Published : 17 Feb 2022 09:22 AM
Last Updated : 17 Feb 2022 09:22 AM

தென் தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: வங்கக் கடலில் இருந்து தமிழகம் நோக்கி கிழக்கு திசை நோக்கி காற்று வீசுகிறது. அதில் வேக மாறுபாடு ஏற்பட் டுள்ளது. எனவே, பிப். 17-ம் தேதி (இன்று) தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இதர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதி களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வரும் 18-ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகத்தில் 5 செ.மீ., சுருளக்கோடு, பெருஞ்சாணி அணை, இரணியல், புத்தன் அணை, களியல், தக்கலை, குழித்துறை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x