Published : 08 Jan 2022 05:54 AM
Last Updated : 08 Jan 2022 05:54 AM

4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் (ஜன.8, 9) லேசான மழை பெய்யக்கூடும்.

10-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

11-ம் தேதி டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் 9-ம் தேதி காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும். சென்னையில் அடுத்த2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வெப்பநிலை 22 முதல் 30 டிகிரிசெல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமைய இயக்குநர் நா.புவியரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x