Published : 27 Dec 2021 06:49 AM
Last Updated : 27 Dec 2021 06:49 AM
சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 27-ம் தேதி (இன்று) பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும். 28, 29-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
30-ம் தேதி கடலோர மாவட்டங்கள், அதை ஒட்டிய உள் மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி பா.கீதா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT