Published : 23 Apr 2014 08:59 AM
Last Updated : 23 Apr 2014 08:59 AM
தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் திங்கள்கிழமையன்று ஒரு நாள் மட்டும் ரூ.173 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முதல்முறையாக, டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட் டுள்ளது.
இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் திங்கள்கிழமையன்று மட்டும் 4.11 லட்சம் பெட்டி மதுவகைகளும், 1.22 லட்சம் பீர் பெட்டிகளும் விற்பனையாகியுள்ளன. இதன்மூலம் டாஸ்மாக் கடைகளில் ரூ.173 கோடி அளவுக்கு விற்பனை நடைபெற்றுள்ளது. இதுபோல், கடந்த 14-ம் தேதியன்று ரூ.101 கோடிக்கும், அதற்கு முன்பு 6-ம் தேதி ரூ.93 கோடிக்கும் விற்பனை நடைபெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT