Published : 07 Nov 2021 05:07 PM
Last Updated : 07 Nov 2021 05:07 PM

சென்னையில் திடீர் கனமழை ஏன்?- வானிலை ஆய்வு மையம் விளக்கம்

சென்னையில் குறுகிய காலத்திலேயே அதிக கனமழை பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் நேற்று இரவு 10 மணி முதல் காலை 5 மணிவர கனமழை நீடித்தது.

கனமழை காரணமாக செம்பரபாக்கம் ஏரியிலிருந்தும், புழல் ஏரியிலிருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல சாலைகள் நீரில் மூழ்கியுள்ளன.

இந்த நிலையில் எந்த முன்னெச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்காத நிலையில் சென்னையில் ஏன் கனமழை பதிவாகியது என்று வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்தர் கூறும்போது, " நேற்று திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மட்டுமே கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் சென்னையில் குறுகிய காலத்திலேயே அதிக கனமழை பதிவாகியது. இரவு 10 மணி வரை 3 செ.மீ மழையும், 1 - 1.45 மணி வரை 6 செ.மீ மழையும்,5 - 6 மணிவரை 7 செ.மீ மழையும் பதிவாகியது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 23 செ.மீ மழை பதிவாகியது. மிகக் குறுகிய கால வானிலை மாற்றத்தை கணிப்பது கடினம். நேற்று காலையில் நாங்கள் வானிலை தகவல் கொடுக்கும்போது தெரியவில்லை.சில வானிலை மாற்றங்களை சில மணி நேரம் முன்பாகத்தான் கணிக்க முடியும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x