Published : 30 Oct 2021 04:05 PM
Last Updated : 30 Oct 2021 04:05 PM

நான்கு மாவட்டங்களில் இடி, மின்னலுடன்  கனமழை; ரெட் அலர்ட்:  வானிலை ஆய்வு  மையம்

கன்னியாகுமரி, திருநெல்வேலி , தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன், கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் இயக்குனர் புவியரசன் செய்தியாளர் சந்திப்பில் பேசும்போது , “ தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் இலங்கை கடற் பகுதிகளில் நீடிக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த மூன்று நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகர்வதால், இதன் காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி , தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். இதன் காரணமாக இம்மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுரை, நாகப்பட்டினம், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்த வரை அடுத்த 24 மணி நேரத்து வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் கனமழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீவைகுண்டத்தில் அதிகபட்சமாக 18 செ.மீட்டரும், பரங்கிபேட்டை, தூத்துகுடியில் 17 செ.மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

வங்க கடலை ஓட்டிய கடல் பகுதிகளிலும், கேரளாவை ஓட்டிய கடற்பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிமீ காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களை அடுத்த மூன்று நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x