Published : 10 Oct 2021 03:17 AM
Last Updated : 10 Oct 2021 03:17 AM
தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால், சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் இன்றும், 17-ம் தேதியும் 14 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கோடம்பாக்கம் - தாம்பரம் இடையே வரும் 10, 17-ம் தேதிகளில் (ஞாயிறு) காலை 11.40 மணி முதல் மாலை 3.40 மணி வரை தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. இதனால், மேற்கண்ட நேரத்தில் கடற்கரை - தாம்பரம் தடத்தில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, கடற்கரை - தாம்பரம் காலை 11.00, 11.30, 11.45, மதியம் 12.20, 12.40, 1.40, 2.30 மணி ரயில்கள், தாம்பரம் - கடற்கரை காலை 11.30, மதியம் 12.10, 12.30, 1.50, 2.50, மாலை 3.30 மற்றும் திருமால்பூர் - கடற்கரை காலை 10.40 மணி ரயில்கள் ஆகிய 14 சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.
கடற்கரை - செங்கல்பட்டு காலை 11.15, மதியம் 12.00, 1.20, 2.00, 3.00 மணி ரயில்கள், கடற்கரை - அரக்கோணம் மதியம் 1 மணி ரயில் ஆகியவை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும். செங்கல்பட்டு - கடற்கரை காலை 10.15, 11.00, மதியம் 12.25, 1.25, 2.15 மணி ரயில்கள் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரம் வரை இயக்கப்படும்.
இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT