Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM

கடற்கரை - செங்கல்பட்டு இடையே ரயில் சேவைகள் இன்று ரத்து

தாம்பரம் யார்டில் இன்று காலை 10 முதல் மதியம் 2 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 7.50 மணிக்கு செங்கல்பட்டுக்கு இயக்கப்படும் மின்சார ரயில் இன்று தாம்பரம், செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 9.32, 10.10, 10.56, 11.50 மற்றும் நண்பகல் 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் தாம்பரம்-செங்கல்பட்டு இடையே ரத்து செய்யப்படுகின்றன.

மறுமார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து கும்மிடிப்பூண்டிக்கு காலை 10.30, செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 9.40, 11, 11.30, 12.20 மற்றும் மதியம் 1 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது. மேலும், காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 9.15, திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது.

எனினும், பயணிகளின் வசதிக்காக காஞ்சிபுரம் மற்றும் திருமால்பூரில் இருந்து சென்னை கடற்கரைக்கு நண்பகல் 12 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x