Published : 14 Aug 2021 03:19 AM
Last Updated : 14 Aug 2021 03:19 AM
தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வில்லிவாக்கம் - வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று காலை 11.05 மணி முதல் மதியம் 1.05 மணி வரையில் பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், மின்சார ரயில்களின் சேவையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வேளச்சேரியில் இருந்துஆவடிக்கு காலை 10.15, ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 11, ஆவடியில் இருந்து வேளச்சேரிக்கு மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு செல்லும் ரயில்களின் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்ட்ரல் - கடம்பத்தூர் இடையிலான மதியம் 12.10 மணி ரயில், ஆவடியில் இருந்து இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்குக்கு மதியம் 12.20 மணிக்கு செல்லும் ரயில், 1 மணிக்கு திருவள்ளூருக்கு செல்லும் ரயில் ஆகியவை சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.
இதேபோல் வரும் 15-ம் தேதி (நாளை) காலை 10.45 மணி முதல் மதியம் 12.45 மணி வரையில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT