Published : 03 Aug 2021 03:15 AM
Last Updated : 03 Aug 2021 03:15 AM
கோவை, நீலகிரி மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் 3-ம் தேதி (இன்று) நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், வட கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 4, 5, 6-ம் தேதிகளில் இப்பகுதிகள் மட்டுமின்றி அனைத்து கடலோர மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 97 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT