Published : 02 Jul 2021 03:13 AM
Last Updated : 02 Jul 2021 03:13 AM
பயணிகளின் தேவையை கருத்தில்கொண்டு சென்னை கடற்கரை - வேளச்சேரி தடத்தில், வரும் 4-ம் தேதி முதல் கூடுதலாக 26 மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா ஊடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் மின்சார ரயில்களின் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, கூடுதல் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சென்னை கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் சேவை தடத்தில் கூடுதலாக 26 மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இதேபோல், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல், சென்னை கடற்கரை - அரக்கோணத்துக்கு கூடுதலாக ஒரு மின்சார ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. வரும் 4-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை மற்றும் புறநகரில் 447 மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT