Published : 08 Jun 2014 12:03 PM
Last Updated : 08 Jun 2014 12:03 PM

அதிமுக எம்எல்ஏவை வெட்டிய 4 பேர் கைது; 2 பேர் தலைமறைவு - மானாமதுரையில் பதற்றம்: போலீஸ் குவிப்பு

சிவகங்கை மாவட்டம், மானா மதுரை அதிமுக எம்எல்ஏ ம.குண சேகரன் அரிவாளால் வெட்டப் பட்டதில் படுகாயமடைந்தார். இது தொடர்பாக மானாமதுரையைச் சேர்ந்த 4 இளைஞர்களை போலீ ஸார் சனிக்கிழமை கைது செய்த னர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மானாமதுரையில் சில இடங்களில் கடைகள் மீது கல் வீச்சும் நடைபெற்றது. இதன் காரணமாக இந்தப் பகுதி யில் பதற்றம் நிலவுதால் இங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப் பட்டுள்ளனர்.

மானாமதுரை அதிமுக எம்எல்ஏ ம.குணசேகரன் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். மானாமதுரை அதிமுக ஒன்றியச் செயலாளராகவும் உள்ளார்.

மானாமதுரை நகர் அதிமுக அவைத் தலைவர் தெய்வம் என்பவ ரது வீடு, ஆனந்தவல்லி அம்மன் கோயில் எதிரே இருந்தது. கடந்த ஆண்டு தேவஸ்தானத்துக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது வீடும் இடிக் கப்பட்டதாம்.

இதற்கிடையே தெய்வம் இறந்து விட்ட நிலையில் அவரது மகன் லோகேஸ்வரன்(21) எம்எல்ஏ குணசேகரனிடம், அதிமுக-வினரான எங்களுக்கு நீங்கள் உதவி செய்யவில்லை. வீடு இடிக் கப்பட்டபோது ஆதரவாகச் செயல் படவில்லை. தற்போதாவது வீடு கட்ட ஏற்பாடு செய்து தாருங்கள் எனக் கேட்டு அடிக்கடி தகராறு செய்துள்ளார்.

எம்எல்ஏ குணசேகரனும் ஆக்கி ரமிப்பில் இருந்தால் வீடு இடி படத்தான் செய்யும், அரசு விதி மீறி செயல்பட முடியாது என பதில் சொல்லி வந்துள்ளார். இது தொடர்பாக எம்எல்ஏ-விடம் தொலைபேசியில் அடிக்கடி பேசி லோகேஸ்வரன் தகராறு செய் துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு அண்ணா சிலை அருகில் சோமன் என்பவரது கடையில் அமர்ந்து எம்எல்ஏ குணசேகரன், ஆறு முகம் ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். இதனைக் கவனித்த தெய்வம் மகன் லோகேஸ் வரன், இதே ஊரைச் சேர்ந்த பாலமுருகன், சசிக்குமார், கார்த்திக் என்ற நேதாஜி, கார்த்தி, அஜித்குமார் ஆகிய 6 பேரும் எம்எல்ஏ-விடம் போய் பேசினர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது. உடனே மறைத்து வைத் திருந்த அரிவாள், வாள் போன்ற ஆயுதங்களால் எம்எல்ஏ-வை அவர்கள் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.

இதில் படுகாயமடைந்த எம்எல்ஏ குணசேகரன் மதுரை தனி யார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார். உடன் இருந்த சோமன், ஆறுமுகம் ஆகிய இருவருக் கும் கையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது.

எம்எல்ஏவை வெட்டிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிற போலீஸார், இதில் சம்பந்தப்பட்ட சசிக்குமார், கார்த்திக் என்ற நேதாஜி, கார்த்தி, அஜித்குமார் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான லோகேஸ்வரன், பாலமுருகன் மற்றும் பலரைத் தேடி வருகின்றனர்.

எம்எல்ஏ-வை அரிவாளால் வெட்டும் அளவுக்கு இளைஞர்கள் ஆத்திரமடைய, பெண் தொடர்பு காரணமா என்கிற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x