Published : 09 Jun 2014 05:59 PM
Last Updated : 09 Jun 2014 05:59 PM

தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அதிபர் உத்தரவு

இலங்கையில் உள்ள 82 தமிழக மீனவர்களை விடுவிக்க அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டுள்ளார்.

ராஜபக்சேவின் உத்தரவை அடுத்து தமிழக மீனவர்கள் ஓரிரு நாளில் தமிழகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சனிக்கிழமை இரவு கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர்.

முன்னதாக ராமேஸ்வரம் மீனவர்கள் 82 மீனவர்களையும் காவலில் வைக்க இன்று காலை இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மன்னார் நீதிமன்றத்தில் 46 மீனவர்களும், ஊர்காவல் கோர்ட்டில் 36 மீனவர்களும் ஆஜராகினர். 46 மீனவர்களை ஜுன் 16 வரையும், 36 பேரை ஜுன் 20-ம் தேதி வரையும் சிறையில் அடைக்க மன்னார் நிதிமன்றம் உத்திரவிட்டிருந்தது.

இது குறித்து, டிவிட்டரில் அதிபர் ராஜபக்சே, நல்லெண்ண நடவடிக்கையாக 82 தமிழக மீனவர்களை விடுவிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சேவின் உத்தரவையடுத்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் தமிழக மீனவர்கள் ஒப்படைக்கப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x