Published : 24 Jun 2014 09:28 AM
Last Updated : 24 Jun 2014 09:28 AM
இந்து இயக்கத் தலைவர்கள் அனை வருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி முதல்வர் தனிப்பிரிவில் இந்து மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை மனு கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அக்கட்சியின் மாநில அமைப்புக் குழு செயலாளர் கணபதி ரவி, இளைஞரணி அமைப் பாளர் ஜெயம் ஏ.பாண்டியன் ஆகியோர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இந்து தலை வர்கள் மற்றும் முழுநேர ஊழியர்கள் தொடர்ந்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்து முன்னணியின் திருவள்ளூர் மாவட்டத் தலைவர் சுரேஷ்குமார் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதை அர்ஜூன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மதுரையில் சுரேஷ்குமார், வேலூரில் வெள்ளையப்பன், சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ், இப்போது சுரேஷ்குமார் என ஒரே ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 4 இந்து இயக்க நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
எனவே, அனைத்து இந்து இயக்கத் தலைவர்களுக்கும் உடனடியாக போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்து இயக்க நிர்வாகிகள், பாதுகாப்புக்காக கத்தி வைத்துக் கொள்ள அனுமதித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்ற முதல்வரைக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT