Published : 22 Dec 2020 03:16 AM
Last Updated : 22 Dec 2020 03:16 AM
முகூர்த்தம் இல்லாத நாட்களிலும் வரத்துக் குறைவால் மதுரை மல்லிகை நேற்று கிலோ ரூ.2 ஆயிரத்தைத் தொட்டது.
கரோனா ஊரடங்கால் மக்கள் முடங்கியதால் வீட்டு விழாக்கள், அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இத னால் பூக்கள் வாங்க ஆளில்லை. கோயில்களும் மூடப்பட்டதால் பூக்கள் தேவை முற்றிலும் இல் லாமல் இருந்தது.
அதனால், விவசாயிகள் பூக்களைப் பறிக்காமல் செடி களிலேயே விட்டனர். வருமானம் இன்றி செடிகளையும் பராமரிக்க முடியவில்லை.
அதனால், சந்தைக்கு பூக்கள் வரத்து தற்போது வரை மிகக் குறைவாகவே உள்ளது.
தென்மாவட்டங்களில் மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட் போன் றவை முக்கியமானவை. இந்த மார்க்கெட்களுக்கு மல்லிகைப் பூக்கள் வரத்துக் குறைந்ததால் அதன் விலை முகூர்த்தம் மற்றும் விழாக்கள் இல்லாத நாட்களில்கூட அதிகமாக இருக்கிறது.
மாட்டுத்தாவணி பூ மார்க் கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்றது.
முல்லைப்பூ ரூ.700, கோழிக் கொண்டை ரூ.70, சம்பங்கி ரூ.120, செவ்வந்தி ரூ.200, மரிக்கொழுந்து ரூ.150, அரளி ரூ.300 வரை விற்றது.
பூ வியாபாரிகள் கூறுகையில், ‘‘பூக்கள் வரத்துக் குறைவாக உள்ளதால், அனைத்து வகைப் பூக்களின் விலையும் தற்போது உயர்ந்துள்ளது.
அதில் மல்லிகைப்பூ வரத்து மொத்தமாகச் சரிந்ததால் அதன் விலை சாதாரண நாட்களிலேயே விழாக்காலம்போல் விலை உயர்ந்துள்ளது,’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT