Published : 12 Nov 2020 03:14 AM
Last Updated : 12 Nov 2020 03:14 AM

தமிழக வனத் துறையில் 10 ஆண்டு முதல் 36 ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக பணிபுரியும் 112 பழங்குடியினர்

கோப்புப்படம்

மதுரை

10 முதல் 36 ஆண்டுகள் வரை தற்காலிகமாகப் பணியாற்றும் 112 பழங்குடியினர் தற்போது வரை பணிநிரந்தரம் செய்யப்படாமல் ஓய்வு பெறும் அவலம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் வனத்துறை உருவாக் கப்பட்ட பிறகு காடுகளைப் பாது காக்க பூர்வ குடிகள் தற்காலிகப் பணி யாளர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்கள், வனத்துறையில் 10 முதல் 36 ஆண்டுகள் வரை பணி நிரந் தரம் செய்யப்படாமல் தற்காலிகப் பணியாளர்களாகவே ஓய்வு பெறும் அவலம் தொடர்கிறது.

கடந்த ஆண்டு இவர்களைப் பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்தநிலையில் திடீரென அதை நிறுத்தி வைத்ததால் தற்காலிகப் பணியாளராகப் பணியாற்றும் பழங் குடியினர் விரக்தி அடைந்தனர்.

இதுகுறித்து தமிழக முதல்வ ருக்கு மனு அனுப்பிய, ஏக்தா பரிசத் காந்திய மக்கள் அமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளரும், பழங்குடியினர் உரிமைக்கான செயல்பாட்டாளருமான தன்ராஜ் கூறியதாவது:

வனச் சார்நிலைப் பணியான வேட்டைத்தடுப்புக் காவலர்களாக தற்போது 1,119 பேர் பணியாற்று கின்றனர். இவர்களில் 30 சதவீதம் பேர் பழங்குடிகளாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஏனென்றால் தலைமுறை தலை முறையாக வனத்தில் வாழும் பழங் குடிகளே முழு வனம் குறித்து பாரம் பரிய அனுபவ அறிவு கொண் டவர்கள்.

காட்டில் தீ பரவினால் இவர்களால் அதனை முழுமையாகத் தடுக்கவும், அணைக்கவும் இயலும். மேலும், வேட்டைத் தடுப்பு போன்ற மிக ஆபத்தான பணிகளைத் தங்கள் மூதாதையரின் பாரம்பரிய அறிவைக் கொண்டு தங்களின் தனித்திறன் களாலும் திறம்படச் செய்கின்றனர்.

இவ்வாறு வனத்துறையில் தீத் தடுப்பு, வேட்டைத் தடுப்பு போன்ற வனச் சார்நிலைப் பணிகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாகப் பணி யாற்றும் பழங்குடிகளில் இருந்து 15 சதவீதம் பேரை வனக் காவலர் களாகப் பணிநிரந்தரம் செய்வதற்காக அரசு கொள்கை முடிவு எடுத்தது.

இதன்படி தகுதியானோர் கண்டறி யப்பட்டு கடந்த ஆண்டு சென்னைக்கு வரவழைத்து, அவர்களுக்கு நேர் முகத் தேர்வும், சான்றிதழ் சரிபார் ப்புப் பணியும் நடந்து முடிந்தது. இதில் தேர்வானோருக்கு ஓராண்டு காலமாக தமிழக அரசு பணி உத்தரவு ஆணையை இன்னும் வழங்க வில்லை. இத்தகுதிப் பட்டியலில்10 முதல் 36 ஆண்டுகளாகப் பணியாற்றும் பழங்குடியினர் 112 பேர் உள்ளனர். இவர்கள் இன்றைய தேதி வரை பணி நிரந்தரம் செய்யப்படாமல் மிக சொற்பமான ஊதியத்தில் மிக ஆபத்தான பணிகளைச் செய் கின்றனர்.

இவர்களைப் பணி நிரந்தரமாக்க அரசுக்குப் பெரியளவில் நிதி தேவை இல்லை. ஆனால், அரசின் கண்டுகொள்ளாத செயல் பெரும் வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வனத்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘வனத்துறையில் தற்காலிகப் பணியாளர்கள் யாரும் நிரந்தரப்பணிக்கு எடுக்கப் படவில்லை.

தற்காலிகப் பணியாளராகப் பணிபுரிந்த 112 பழங்குடியினரின் பணிகளை வரை முறைப்படுத்தவே அவர்களின் பணி விவரம் சேகரிக்கப் பட்டது,’’என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x