Published : 23 May 2014 09:18 PM
Last Updated : 23 May 2014 09:18 PM
கடந்த பல ஆண்டுகளாக அ.இ.அ.தி.மு.க-வில் முக்கியப் பொறுப்புகளை வகித்த முன்னாள் எம்.பி. சிவசாமி கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதனை முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
கட்சியின் நலன்களுக்கு விரோதமாக அவர் செயல்பட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்பட்டுள்ளார் என்றும் அவருடன் யாரும் எந்த வித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றில் கூறியுள்ளார்.
2001ஆம் ஆண்டு திருப்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வென்ற சி.சிவசாமி 2009ஆம் ஆண்டு இதே திருப்பூரிலிருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் அவர் இன்று கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT